அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சௌத்பார் கடற்பகுதிக்கு வரவுள்ள தென்பகுதி மீனவர்களுக்கு உள்ளூர் மீனவர்கள் கடும் எதிர்ப்பு-ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவும் திட்டம்.- படங்கள்


மன்னார் சௌத்பார் தென்பகுதி கடற்கரைப்பகுதியில் தங்கி நின்று வாடிகளை அமைத்து கடற்தொழில் நடவடிக்கைகளில்; ஈடுபடவுள்ள தென் பகுதி மீனவர்களுக்கு மன்னார் பனங்கட்டுக்கோட்டு மீனவ சமூகம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பனங்கட்டுக்கோட்டு மீனவர்கள் கருத்துத்தெரிவிக்கையில்,,,,

மன்னார் சௌத்பார் கடற்கரை பனங்கட்டுக்கோட்டு கிராம மீனவர்கள் தொழில் செய்வதற்கான ஒரு இடமாக காணப்படுகின்றது.ஆனால் வருடா வருடம் தென்பகுதி மீனவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து வாடிகளை அமைத்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்கொழும்பு,சிலாபம்,புத்தளம் போன்ற இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் தமது குடும்பங்களுடன் வருகின்றனர்.

இவர்கள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் வருவார்கள் அடுத்த வருடம் ஏப்பிரல் மாதம் வரை தொழில் செய்வார்கள். 

சுமார் 6 மாதம் தங்கி நின்று மீன் பிடியில் ஈடுபடுகின்றனர்.

தடை செய்யப்பட்ட அனைத்து மீன்பிடி தொழில்களையும் அவர்கள் செய்கின்றார்கள்.இவர்களுக்கு கடற்படை,பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர்.

இன்னும் ஒரு சில தினங்களில் 190 ற்கும் மேற்பட்ட மீனவர்களும் படகுகளும் சௌத்பார் பகுதிக்கு வர உள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸாரும்,கடற்படையினரும் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தென் பகுதி மீனவர்களின் வருகையால் எமது உள்ளூர் மீனவர்கள் பாரிய அளவில் பாதிப்புக்களை சந்திக்கின்றனர்.சௌத்பார் கடற்பரப்பில் எமது மீனவர்கள் மேற்கொள்ளும் கரை வலைத்தொழிலும் பாதிப்படைகின்றது.

சௌத்பார் கடற்பரப்பில் தென் பகுதி மீனவர்கள் தங்கி நின்று சுதந்திரமாக தொழில் செய்கின்றனர்.ஆனால் எமது மீனவர்கள் சௌத்பார் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்றால் படையினருடைய கெடுபிடிகளுக்கு மத்தியில் பாஸ் பெற்ற பின்பே தொழில் செய்ய முடிகின்றது.

எனவே இம்முறை இந்த தென் பகுதி மீனவர்களுடைய வருகையை நாங்கள் முற்று முழுதாக எதிர்க்கவுள்ளோம்.

இவர்களுக்கு படையினர் பாதுகாப்பை வழங்குகின்றனர்.ஆனால் எமது மீனவர்களுக்கு அச்சுறுத்தல்களை விடுக்கின்றனர்.

எனவே மன்னார் மாவட்ட கடல் தொழில் உதவிப்பணிப்பாளர்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்  மற்றும் அமைச்சர் டெனிஸ் வரன் ஆகியோர் நடவடிக்கை எடுத்து இந்த மீனவர்களின் வருகையை நிறுத்த வேண்டும்.

அல்லாது விட்டால் தென் பகுதி மீனவர்களின் வருகைக்கு எதிராக மன்னார் மாவட்ட மீனவ சமூகம் பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என அந்த மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




மன்னார் சௌத்பார் கடற்பகுதிக்கு வரவுள்ள தென்பகுதி மீனவர்களுக்கு உள்ளூர் மீனவர்கள் கடும் எதிர்ப்பு-ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவும் திட்டம்.- படங்கள் Reviewed by Admin on November 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.