மரித்த விசுவாசிகள் திருநாள் இன்று பேசாலையில் அனுஸ்டிக்கப்பட்டது -படங்கள்
மரித்த ஆத்துமாக்கள் தினத்தை அகிலத்திருச்சபை இன்று (02.11.2013) நினைவு கூர்கிறன்து.
இதனை சிறப்பிக்கும் முகமாக பேசாலைபங்கில் மரித்த விசுவாசிகளின் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இன்று காலை நடைபெற்ற மரித்த விசுவாசிகளின் தினத்தை நினைவுகூறும் முகமாக பேசாலை சேமக்காலையில் உதவி பங்குதந்தை அருட்பணி அருட்குமரன் மரித்த விசுவாசிகளின் ஆன்மாசாந்திக்காக இறைவனை வேண்டி திருப்பலியினை ஒப்பு கொடுத்தார்.
கத்தோலிக்க மக்கள் செறிவாக வாழும் பேசாலையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திருப்பலியில் பங்குபற்றி தமது மரித்த உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவனை பிரார்த்தித்து அஞ்சலி செலுத்தினர்.
இதன் போது அருட்தந்தை மரித்த விசுவாசிகளின் கல்லறைகளை ஆசிர்வதித்து திருப்பலியை ஒப்ப கொடுத்தார்
மரித்த விசுவாசிகள் திருநாள் இன்று பேசாலையில் அனுஸ்டிக்கப்பட்டது -படங்கள்
Reviewed by Author
on
November 02, 2013
Rating:
No comments:
Post a Comment