அண்மைய செய்திகள்

recent
-

4வது தமிழாராட்சி மாநாட்டில் பலியானோரின் 40வது நினைவு தினம்

யாழில் நடைபெற்ற நான்காவது தமிழாராட்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களின் நாற்பதாவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் நேற்று காலை அனுஷ்டிக்கப்பட்டது .

கடந்த 1974 ஆம் ஆண்டு யாழ். வீரசிங்க மண்டபத்தின் முன்னாலுள்ள முற்ற வெளியில், நான்காவது உலகத் தழிழாராட்சி மாநாடு நடைபெற்றது.

அதன் இறுதிநாளான ஜனவரி 10ம் திகதி ஏற்பட்ட அசம்பாவீதம் காரணமாக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் மின்சார வயர்கள் அறுந்து வீழ்ந்து மாநாட்டில் கலந்து கொண்டிருந்த ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

இதன்போது உயிரிழந்தவர்களது நினைவாக அந்த இடத்தில் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இறந்தவர்களின் நாற்பதாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்த நினைவுத் தூபியில் நேற்றையதினம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர். 
4வது தமிழாராட்சி மாநாட்டில் பலியானோரின் 40வது நினைவு தினம் Reviewed by Author on January 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.