இந்திய மீனவர்கள் 18 பேர் கைது
யாழ். எழுவைதீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 18 பேர் இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை கைதுசெய்யப்பட்டதாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறையின் பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் கோட்டைப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம் ஆகிய பகுதிகளிலிருந்து 05 படகுகளில் வந்த நிலையில் மேற்படி 18 மீனவர்களை கைதுசெய்த கடற்படையினர், தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேற்படி மீனவர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் (22) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்திய மீனவர்கள் 18 பேர் கைது
Reviewed by NEWMANNAR
on
July 22, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment