தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான இரு வேட்பாளர்களும் ஒதுக்கி வைத்துள்ளனர் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா-Photos
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான இரு வேட்பாளர்களும் குஸ்டரோக நோயாளியைக் கண்டு ஒதுங்குவதைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஒதுக்கி வைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மன்னார் ஆகாஸ் ஹோட்டலில் இன்று புதன் கிழமை (24) காலை இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,,,
எதிர்வரும் 8 ஆம் திகதி இடம் பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு தெரிவிக்குமாறு ஆளும் கட்சி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கேட்கவில்லை.
இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். வடமாகாண மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டிருக்கும் தமிழ்க் கூட்டமைப்பினரின் சுயநல செயற்பாடுகளாலும், தமிழ் மக்கள் மீதான அவர்களின் அக்கறையின்மையாலுமே இந்தத் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை நிராகரித்துள்ளனர்.
தமிழ் பேசும் மக்களின் துயரைத் துடைத்துள்ள ஒரு அரசியல் தலைவரென்றால் அது மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மாத்திரமே. மத்திய அரசாங்கத்திலிருந்த கடந்த காலத் தலைமைகள் தமிழ் பேசும் மக்களிடம் மாற்றாந்தாய் அணுகு முறையையே மேற்கொண்டிருந்தனர் எனத் தெரிவித்தார்.
குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், சுற்றாடல்துறை அமைச்சருமான சுசில் பிரேம ஜெயந்த, பல நூற்றுக்கனக்கான இளைஞர் யுவதிகள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் லிங்கேஸ், பிரதி அமைப்பாளர் சந்துரு,மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.டிலான்,பிரதேச சபை உறுப்பினர்களான சிலுவை பீரிஸ்,எஸ்.சூசை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் நிருபர்
(24-12-2014)
மன்னார் ஆகாஸ் ஹோட்டலில் இன்று புதன் கிழமை (24) காலை இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,,,
எதிர்வரும் 8 ஆம் திகதி இடம் பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு தெரிவிக்குமாறு ஆளும் கட்சி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கேட்கவில்லை.
இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். வடமாகாண மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டிருக்கும் தமிழ்க் கூட்டமைப்பினரின் சுயநல செயற்பாடுகளாலும், தமிழ் மக்கள் மீதான அவர்களின் அக்கறையின்மையாலுமே இந்தத் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை நிராகரித்துள்ளனர்.
தமிழ் பேசும் மக்களின் துயரைத் துடைத்துள்ள ஒரு அரசியல் தலைவரென்றால் அது மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மாத்திரமே. மத்திய அரசாங்கத்திலிருந்த கடந்த காலத் தலைமைகள் தமிழ் பேசும் மக்களிடம் மாற்றாந்தாய் அணுகு முறையையே மேற்கொண்டிருந்தனர் எனத் தெரிவித்தார்.
குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், சுற்றாடல்துறை அமைச்சருமான சுசில் பிரேம ஜெயந்த, பல நூற்றுக்கனக்கான இளைஞர் யுவதிகள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் லிங்கேஸ், பிரதி அமைப்பாளர் சந்துரு,மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.டிலான்,பிரதேச சபை உறுப்பினர்களான சிலுவை பீரிஸ்,எஸ்.சூசை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் நிருபர்
(24-12-2014)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான இரு வேட்பாளர்களும் ஒதுக்கி வைத்துள்ளனர் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா-Photos
Reviewed by NEWMANNAR
on
December 25, 2014
Rating:
No comments:
Post a Comment