அண்மைய செய்திகள்

recent
-

தேர்தலுக்கு பின் விரிவான தேசிய வேலைத்திட்டம்: ஜனாதிபதி உறுதி


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் தேசிய உணவு உற்பத்தி, போதைப் பொருள் கட்டுப்பாடு, சுற்றாடல் பாதுகாப்பு என்பன தொடர்பில் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதற்கான அடிப்படை திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுற்றாடல் மற்றும் விலங்கு வதைக்கு எதிரான அமைப்பின் பிரதிநிதிகளுடன் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பல உணவுப் பொருட்களை இலங்கையிலேயே உற்பத்தி செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூகத்தின் அனர்த்தமாக மாறியுள்ள போதைப் பொருளை கட்டுப்படுத்த விரிவான தேசிய வேலைத்திட்டத்தின் அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு பின் விரிவான தேசிய வேலைத்திட்டம்: ஜனாதிபதி உறுதி Reviewed by NEWMANNAR on July 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.