அண்மைய செய்திகள்

recent
-

தீர்வு விடயத்தில் பிரதான எதிர்க்கட்சியும் நாட்டுக்கு சாதகமாக செயற்படவேண்டும்...


பிர­தான இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஆட்­சி­ய­மைத்­தி­ருப்­பதால் அத­னூ­டாக நாட்டில் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வு எட்­டப்­படும் வாய்ப்­புகள் அதி­க­மா­கவே உள்­ளன. தீர்வு விட­யத்தில் பிர­தான எதிர்க்­கட்­சியும் நாட்­டுக்கு சாத­க­மான வகையில் செயற்­பட வேண்டும் என போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார்.

இரு கட்­சி­களும் இணக்­கப்­பாடு அடிப்­ப­டையில் ஒன்­றி­ணைந்து செயற்­பட ஆரம்­பித்­தி­ருப்­பதன் மூல­மாக நாட்டின் அபி­வி­ருத்­தி­க­ளையும் நாட்­டுக்கு எதி­ரான சர்­வ­தேச அழுத்­தங்­க­ளையும் தவிர்க்க முடியும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் ஒன்­றி­ணைந்து அமைத்­தி­ருக்கும் தேசிய அர­சாங்­கத்தில் முன்­னெ­டுக்­கப்­படும் வேலைத்­திட்­டங்கள் சாத­க­மா­ன­தாக அமை­யுமா என வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்.

தேசிய அர­சாங்­கத்தில் நாமும் பங்­கு­தா­ரர்­க­ளாக செயற்­பட தீர்­மாந்­தித்­துள்ளோம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் தலை­மையில் அமைந்­துள்ள தேசிய அர­சாங்­கத்தில் நாமும் கைகோர்­துள்ளோம்.

ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் ஒன்­றி­ணைந்து கூட்டு ஆட்­சியை அமைக்க தீர்­மா­னித்­துள்­ளது. ஆயினும் இது இரண்டு வரு­ட­கால ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டியில் தான் இவ்­வி­ரண்டு கட்­சி­களும் ஒன்­றி­னைந்­துள்­ளது. ஆகவே இந்த ஆட்­சியில் நாட்டை அபி­வி­ருத்­தயின் பாதையில் கொண்­டு­செல்­வ­துடன் நாட்­டுக்கு எதி­ரான சர்­வ­தேச அழுத்­தங்கள் மற்றும் அச்­சு­றுத்­தல்கள் அனைத்­திலும் இருந்து காப்­பாற்­றிக்­கொள்ள முடியும் என நம்­பு­கின்றோம்.

எனினும் இப்­போது கூட்டு அர­சாங்­கத்தில் நாம் இணைந்­துள்­ளதால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­பா­டுகள் அனைத்­தையும் ஆத­ரிப்­ப­தாக அர்த்­தப்­ப­டாது. இந்த ஆட்­சியில் நாம் அமைச்சுப் பத­வி­களை பெற்­றாலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வெற்­றிக்­கா­கவும் கட்­சியை பலப்­ப­டுத்தும் நோக்­கத்­தி­லேயே வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்போம். எமது சேவைகள் அனைத்தும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை மையப்­ப­டுத்­தி­ய­தா­கவே அமையும்.

மேலும் இந்த ஆட்­சியில் அனைத்து மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது. ஒரு­சில பிர­தான கட்­சிகள் எம்­முடன் இணை­யா­விட்­டாலும் மூவி­னங்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உறுப்­பி­னர்கள் உள்­ளனர். ஆகவே இது நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் ஆரோக்­கி­ய­மான ஒன்­றா­கவே அமையும். அதேபோல் இந்த ஆட்­சியில் பிர­தான இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­னைந்­துள்­ளது. ஆகவே அத­னூ­டாக நாட்டில் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வு எட்­டப்­படும் வாய்ப்­புகள் அதி­க­மா­கவே உள்­ள­தாக நான் நம்­பு­கின்றேன்.

அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இப்­போது எதிர்க்­கட்­சி­யாக செயற்­ப­டு­கின்­றது. ஆகவே முக்­கி­ய­மான சந்­தர்ப்­பங்­களில் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­படும் வாய்ப்­புகள் அதி­க­மா­கவே உள்­ளது. இந்த சந்­தர்ப்­பத்தை சரி­யாக பயன்­ப­டுத்தி நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த அனை­வரும் முயற்­சிக்க வேண்டும்.

அதே சந்­தர்ப்­பத்தில் கடந்த கால பிரிவினைவாத செயற்பாடுகள் அனைத்தையும் தொடர்ந்தும் முன்னெடுக்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இப்போது அமைந்திருக்கும் நல்ல சந்தர்ப்பங்களை தவறவிடாது சிங்கள தலைமைகளுடன் இணைந்து நாட்டுக்கு சாதகமான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தீர்வு விடயத்தில் பிரதான எதிர்க்கட்சியும் நாட்டுக்கு சாதகமாக செயற்படவேண்டும்... Reviewed by Author on September 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.