நாம் வெற்றி காண்போம் : திருகோணமலையில் சம்பந்தன்...
எமது உரிமை போராட்டப் பயணத்தில் உண்மையிருக்கிறது. நேர்மையிருக்கின்றது. எமது நிலைப்பாட்டை ஆதரிக்கும் சிங்கள மக்களும் உள்ளனர். வடகிழக்கில் வாழும் எமது முஸ்லிம் மக்களும் பல பிரச்சனைகளுடன் உள்ளனர். அவர்களையும் இணைத்துக் கொண்டு எமது பணயத்தில் நாம் வெற்றி காண்போம் என எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தனது சொந்த மாவட்டமான திருகோணமலையில் அவருக்கு மகத்தான வரவேற்பு இன்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அதிகளவிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிவசக்தி ஆனந்தன் ஸ்ரீதரன் போன்றவர்களைத் தவிர ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் போன்றோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த சம்பந்தன்,
இந்த நாட்டில் அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளன. அதனை ஆராயாமல் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாங்கள் இருக்க முடியாது.
அந்த அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கட்சித் தலைவர் பொறுப்பை எடுக்க தீர்மானித்து அதற்கான கோரிக்கையை விடுத்திருந்தது. அதனடிப்படையில் நாம் அரசாங்கத்தை எப்போது ஆதரிக்கலாம் எப்போது எதிர்க்கலாம் என்பதனை ஆராய்ந்து செயற்படலாம்.
அதேசமயத்தில் நாட்டின் அரசியலில் முக்கியமான மாற்றம் நிகழும்போது அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க முடியாது.
நாம் வெற்றி காண்போம் : திருகோணமலையில் சம்பந்தன்...
Reviewed by Author
on
September 07, 2015
Rating:

No comments:
Post a Comment