அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபைக்கு புதிய செயலாளர் நியமனம்.


மன்னார் பிரதேச சபையின் புதிய செயலாளராக வரணிஇ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசையா தயாபரன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர், கடந்த திங்கள் கிழமை(11) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.


இவர் கடந்த 17 வருடங்கள் அரச சேவை அனுபவத்தை கொண்டிருப்பதுடன் பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம், பிரதி விவசாயப்பணிப்பாளர்(விரிவாக்கம்) அலுவலகம், வலயக்கல்வி அலுவலகம் என்பவற்றில் கடமையாற்றியுள்ளதுடன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா என பல மாவட்டங்களிலும் கடமையாற்றியுள்ளார்.

முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் II , I என படிப்படியாக பதவி உயர்வு பெற்ற இவர் அண்மையில் நடைபெற்ற முகாமைத்தவ உதவியாளர் சேவையின் அதி சிறப்பு தரத்திற்கு பதவி உயர்வு பெற்றதன் காரணமாக வடமாகாண சபையால் மன்னார் பிரதேச சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பிரதேச சபைக்கு புதிய செயலாளர் நியமனம். Reviewed by NEWMANNAR on January 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.