கறுப்பு சுதந்திர தினமாக்க வேண்டாம்! அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்: அருட்தந்தை சக்திவேல்...
சுதந்திர தினத்திற்கு முன்பாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திர தினமாக்காது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் உறுப்பினர்கள் மெகஸின் சிறைச்சாலையிலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு பேரணியொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்தப் பேரணி பிரதமர் அலுவலகத்திற்கும் செல்லவுள்ளதாக அமைப்பின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.
கொலைக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி ஜெனிபன் விடுதலை செய்யப்பட்டதைப் போன்று அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என பேரணியில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் கைதிகள் எவரும் இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கறுப்பு சுதந்திர தினமாக்க வேண்டாம்! அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்: அருட்தந்தை சக்திவேல்...
Reviewed by Author
on
February 01, 2016
Rating:

No comments:
Post a Comment