போப் ஆண்டவரிடம் அபாரமாக கேள்வி கேட்டு அசத்திய கனேடிய சிறுவன் ....
கனடா நாட்டை சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவன் எழுப்பிய அபாரமான கேள்விக்கு கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவர் உருக்கமாக பதில் அளித்துள்ளார்.
கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவரிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி ஒன்று சில மாதங்களுக்கும் முன்னர் தொடங்கியது.
6 முதல் 13 வயதுடைய சிறுவர்கள் கலந்துக்கொள்ளும் இந்த நிகழ்ச்சியில், 26 நாடுகளிலிருந்து 250 மாணவர்கள் கேள்வி கேட்டு கடிதம் எழுதியிருந்தனர்.
இவற்றில் 50 கேள்விகளை தெரிவு செய்து அதற்கு பதிலளித்து ஒரு புத்தகமாக தயாரிக்கப்பட்டது. இந்த 50 சிறுவர்களில் கனடா நாட்டை சேர்ந்த ரியான் என்ற சிறுவனும் பங்கேற்றுள்ளான்.
ரியான் போப் ஆண்டவருக்கு கடிதம் எழுதியபோது, ‘அன்பிற்குரிய போப் அவர்களே, இந்த உலகம் படைக்கப்படுவதற்கு முன்னர் கடவுள் என்ன செய்துக்கொண்டு இருந்தார்? எதுவும் படைக்கப்படுவதற்கு முன்னர் உலகமே வெறுமையாக தானே இருந்திருக்கும்? அப்போது கடவுள் தனிமையாக இருந்தது போன்று உணர்ந்தாரா?’ என்ற கேள்வியை எழுதி அனுப்பியுள்ளான்.
‘Dear Pope Francis’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட அந்த புத்தகம் கடந்த 1-ம் திகதி வெளியிடப்பட்டது. அதாவது, ரியான் கேட்ட கேள்விக்கான பதிலும் அதில் இடம்பெற்றுள்ளது.
ரியானின் கேள்விக்கு போப் ஆண்டவர் பதிலளித்தபோது, ‘உலகத்தை படைப்பதற்கு முன்னர் கடவுள் காலத்தை(Time) படைத்தார். ஆனால், இதையெல்லாம் படைப்பதற்கு முன்னால் கடவுள் அன்பை விரும்பினார். அன்பு தான் கடவுள்’ என பதிலளித்துள்ளார்.
போப் ஆண்டவரின் பதில்களை பெற்ற இந்த 50 சிறுவர்களும் ரோம் நகருக்கு சென்று போப் ஆண்டவரை நேரில் சந்தித்து ஆசியும் பரிசுகளைம் பெற்று வந்துள்ளனர்.
ரியானின் சாதனை பயணம் குறித்து பேசிய அவரது ஆசிரியர், ‘ரியான் போன்று ஒவ்வொரு மாணவனுன் தங்களுடைய சிந்திக்கும் திறனை கூர்மையாக்கி கொள்ள வேண்டும்.
ரியான் போன்ற ஒரு மாணவனுக்கு ஆசிரியராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்’ என உருக்கமாக கூறியுள்ளார்.
போப் ஆண்டவரிடம் அபாரமாக கேள்வி கேட்டு அசத்திய கனேடிய சிறுவன் ....
Reviewed by Author
on
March 14, 2016
Rating:

No comments:
Post a Comment