அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் - மீனவர் கூட்டமைப்பு


“கச்சத்தீவை மீண்டும் இலங்கையிடம் இருந்து மீளப்பெறவேண்டும். இதன் மூலமாகவே இலங்கை கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் இடையில் இடம்பெறும் மோதல்களை தவிர்க்க முடியும்” என்று தமிழக மீனவர்களின் சங்கம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

இராமேஸ்வரத்தில் மீனவர்களின் பிரகடனத்தை நேற்று வெளியிட்டுவைக்கும் போதே இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கம், இந்த விடயத்தில் உடனடியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர் உரிமை கூட்டமைப்பு என்ற இந்த சங்கம் கோரியுள்ளது.

இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களிலும் லோக்சபா தேர்தல்களிலும் மீனவர்களும் போட்டியிட இடம் ஒதுக்கித்தரப்படவேண்டும் என்றும் அந்த சங்கம் கேட்டுள்ளது.

இதில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த 20 லட்சம் பேர் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் - மீனவர் கூட்டமைப்பு Reviewed by NEWMANNAR on April 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.