அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட புதிய இளம் கண்டுபிடிப்பாளர் அமைப்பு உதயம்....


மன்னார் மாவட்ட புதிய இளம் கண்டுபிடிப்பாளர் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு மன்னார் உப்புக்குளத்தில் உள்ள அலுவலகத்தில் நேற்று (29) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்விற்கு சட்டத்தரணி எஸ்.வினோதன், முசலி சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி ஜேகாந்தன், ஆசிரியர் திருமதி என்.கனேசலிங்கம், மற்றும் சமாதான நீதவான் என்.கனேசலிங்கம் உட்பட இளைஞர், யுவதிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது நிர்வாகக்குழு, பொதுக்குழு, நெறிப்படுத்தல் குழு என மூன்று குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

நிர்வாகக்குழுவில் தலைவராக என்.கவிவர்மன், செயலாளராக இந்துமதி, பொருளாளராக மிதுசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நெறிப்படுத்தல் குழுவிற்கு வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், சட்டத்தரணி எஸ்.வினோதன், ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட், சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி ஜேக்காந்தன் மற்றும் ஆசிரியை என்.கனேசலிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் ஏனைய இளைஞர்,யுவதிகள் இந்த பொது குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட புதிய இளம் கண்டுபிடிப்பாளர் அமைப்பு உதயம்.... Reviewed by Author on May 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.