இலங்கையில் நல்லாட்சியா? பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!
நல்லாட்சி என்ற மாயைக்குள் இலங்கைத்தீவில் தொடர்ந்தும் நடந்தேறும் மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வார்ப்பட்டமானது, எதிர்வரும் 22ஆம் திகதி மதியம் ஒரு மணி தொடக்கம், மாலை நான்கு மணி வரை பிரித்தானியப் பிரதமர் வாயில் தளத்தின் முன் NO 10 DOWNING STREET WESTMINISTER, LONDON ஒருங்கு செய்யப்பட்டுள்ளது.
தொடர்கின்ற கைதுகளைக் கண்டித்தும், வெள்ளைவான் கடத்தலுக்கு எதிராகவும், புலம்பெயர் தேசங்களில் இருக்கின்றவர்களை திருப்ப அனுப்ப வேண்டாம் என தெரிவித்தும் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது.
இக் கோரிக்கைகளை பிரித்தானிய அரசிற்கு முன் வைக்கும் அதேநேரம், பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நல்லாட்சியா? பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!
Reviewed by Author
on
May 20, 2016
Rating:

No comments:
Post a Comment