அண்மைய செய்திகள்

recent
-

15 வருடங்களின் பின்னர் பண்டாரநாயக்க விமான நிலையம் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்கானது 15 வருடங்களுக்கு பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 29ம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு ஜூலை மதம் 24ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதலின் காரணமாக 7 விமானப்படை வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட அதேவேளை, 14 படை வீரர்கள் காயமடைந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டு கிபிர் விமானங்கள், ஒரு மிக் ரக விமானம், இரண்டு M1-17 , மூன்று K-8 விமானம் உள்ளிட்டவைகள் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை, இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனபாலசிங்கம் ஜெயலக்ஷ்மி, இரத்தினசிங்க புஷ்பகுமரன் அல்லது பொன்னுத்துரை, விக்டர் அல்பிறட் டொமினிக், நாகேந்திரம் நாகரத்தினம், நிர்மலா ரஞ்சன் அல்லது மசூர், சுப்பிரமணியம் நவராஜசிங்கம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த அனைவருக்கும் எதிராக சுமார் 311 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 415 பேர் சாட்சிகளாக பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

15 வருடங்களின் பின்னர் பண்டாரநாயக்க விமான நிலையம் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு Reviewed by Admin on June 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.