வவுனியா வாள்வெட்டில் நான்கு பேர் வைத்தியசாலையில்
வவுனியா வைரவபுளியங்குளம் புகையிரத நிலையவீதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி திருத்தும் நிலையத்தில் வாள் வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வாள்வெட்டுச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டி திருத்தும் நிலையத்தில் வேலையில் இருந்த நான்கு பேரை சரமாரியாக வாளால் வெட்டிவிட்டு முச்சக்கரவண்டியினை அதே இடத்தில் நிறுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார். மேலும் முச்சக்கர வண்டியை வவுனியா பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
முச்சக்கரவண்டியில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டி திருத்தும் நிலையத்தில் வேலையில் இருந்த நான்கு பேரை சரமாரியாக வாளால் வெட்டிவிட்டு முச்சக்கரவண்டியினை அதே இடத்தில் நிறுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார். மேலும் முச்சக்கர வண்டியை வவுனியா பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
வவுனியா வாள்வெட்டில் நான்கு பேர் வைத்தியசாலையில்
Reviewed by Admin
on
June 25, 2016
Rating:

No comments:
Post a Comment