பரீட்சை எழுதும் சகல மாணவர்களுக்கும் வாழ்த்தி நிற்கின்றோம்....
இம்முறை உயர் தரப்பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும், 74 ஆயிரத்து 614 தனியார் பரீட்சார்த்திகள் அடங்குகின்றனர் எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்திகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பிலும் அவர் தெளிபடுத்தினார்.
பரீட்சை மு.ப 8.30 ஆரம்பமாகுவதால் பரீட்சார்த்திகள் மு.ப 8 மணிக்கு முன்னர் பரீட்சை மண்டபவத்திற்கு வருகை தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பரீட்சார்த்திகள் பரீட்சை அனுமதிப்பதிரம்,தேசிய அடையாளஅட்டை அல்லது கடவுச்சீட்டினை பரீட்சை மண்டபத்தில் கட்டாயம் எடுத்துவருதல் வேண்டும்.
மேலும் பரீட்சை மண்டபத்தினுள் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் , கலுகலேட்டர் என்பன பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறு பாவிப்போருக்கு ஐந்து வருடங்களுக்கு பரீட்சை தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
இன்று பரீட்சை எழுதும் சகல மாணவர்களுக்கும் எம் பிரார்த்தனைகள்இன்று (02/08/2016) செவ்வாய்க்கிழமை க.பொ.த (உ /த )பரீட்சை எழுதும் மாணவ மாணவிகள் அனைவரும் கற்றதைக்கொண்டு நிதானமாக பயமின்றி தெளிவுடன் கேள்விகளை விளங்கிக்கொண்டு நம்பிக்கையோடு எழுதுங்கள் வெற்றி உங்களுக்கே.... நியூமன்னார் இணையகுழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம் நல்ல பெறுபேறுகள் எடுப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்...
பரீட்சை எழுதும் சகல மாணவர்களுக்கும் வாழ்த்தி நிற்கின்றோம்....
Reviewed by Author
on
August 02, 2016
Rating:

No comments:
Post a Comment