மன்னார் மண்ணிலும் மாவட்ட சாரணீய பாசறை....... முழுமையான படங்கள் இணைப்பு......
ஆகில இலங்கை பெண்களின் சாரணீய நூற்றாண்டுவிழாவிற்கான அகில இலங்கை ரீதியில் நடைபெற்றுவருகின்ற மாவட்டபாசறை-2016
மன்னார் மண்ணிலும் மாவட்டபாசறை 3நாட்கள் தொடர்ச்சியாக 30-07-2016---02-07-2016 வரை தலைமன்னார் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்றது.
இப்பாசறையில்….
- புனித சவேரியார் பெண்கள் கல்லூரி
- புனித லூசியா மத்திய மகாவித்தியாலயம்
- புனித வளனார் றோ.க.த.க.கல்லூரி
- தலைமன்னார் அரசினர் தமிழ்க்கலவன் கல்லூரி
- புனித ஆன்ஸ் மத்தியமகாவித்தியாலயம்....
இந்த 05 ஐந்து பாடசாலைகளினைச்சேர்ந்த 80 மாணவ சாரணீயர்களோடு 09 ஒன்பது ஆசிரியைகள்….சாரணிய வழிகாட்டுநர்களாக….
- திருமதி.றொவீனா பொன்ராஜா-பெண்கள் சாரணீய வடமாகாண ஆணையாளர்
- திருமதி.J.W.யோசவ் மாவட்ட ஆணையாளர்
- திருமதி. M.M.S.டிக்சன் மாவட்ட பயிற்றுவிப்பாளர்
- திருமதி. J.S.T.பிறின்ஸ் டயஸ் மாவட்ட பயிற்றுவிப்பாளர்
- திருமதி. C.R.வில்மட்
- திருமதி. D.சிசில் பெனோ
- செல்வி. டிலானி யேசுதாசன் வலய ஆணையாளர்
- திருமதி. மேகலா நிகால்
- திருமதி. அனு றிச்சாட்
மூன்று நாள் பயிட்சியானது பெண்களின் வெட்கம் கூச்சசுபாவம் தவிர்த்து தங்களிடம் இருக்கும் தனித்திறமைகளை வெளிக்கொண்டுவருதல் தங்குவதற்கான கூடாரம் அமைத்தல் தொடக்கம் தங்களின் அனைத்து செயற்பாடுகளையும் அவர்களே தான் செய்ய வேண்டும்.
புதிய இடத்தில் புதிய நண்பர்கள் புதிய சு10ழலில் காலநிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறனை வளர்ப்பதற்கும் ஆடல் பாடல் நாடகநடிப்புகளோடு முதலுதவிப்பயிற்சிகள் தலைமைத்துவப்பயிற்சிகள் போன்றவற்றின் மூலம் ஆளுமையை வளர்ப்பதோடு சுயகௌரவமுள்ள தன்னம்பிக்கையுள்ள பெண்களாக சமூதாயத்தில் தடைகளை சவால்கலை எதிர்கொள்ள தற்துணிவை அளிக்ககூடிய பாசறையாக அமைந்தது.
கடைசி நாளான இந்தப்பயிற்சிப்பாசறையின் நிகழ்விற்கு விருந்தினர்களாக….
Dr-S.H.Ali Khan (M.D) The DMO-D.H.TalaiMannar.
Ashoka Kodithuvakku OIC Traffice TalaiMannar.
Sunil Santha SI Community Police Unit TalaiMannar.
V.Kajenthiran (Media) WWW.Newmannar.Com
விருந்தினராக கலந்து கொண்ட வைத்தியர் தனது உரையில் இந்த நிகழ்வு எனது பாடசாலைக்கால சம்பவங்களை நினைவுபடுத்துகின்றது. பெண்கள் நாட்டின் கண்கள் என்பது எல்லோராலும் சொல்லப்படுகின்ற சிறந்த வாக்கியம் ஆனால் இன்னும் பல பெண்கள் வீட்டின் கண்களாகவே உள்ளனர் அவர்கள் நாட்டின் கண்களாக மாறவேண்டுமானால் அதற்கு இப்படியான பயிற்சிகளும் அவசியமாகின்றது. எமக்கான பாரம்பரியத்தோடு ஆளுமையினை வெளிப்படுததி சாதனைகள் படைக்கவேண்டும் என்றார்.
சாரணீயர்களின் கீதத்தோடு சாரணீயர்கள் சூழநிற்க மரியாதையான முறையில சாரணீயக்கொடியிறக்கத்தோடு மூன்று நாள் நிகழ்வு நிறைவுற்றது.
மன்னார் மண்ணிலும் மாவட்ட சாரணீய பாசறை....... முழுமையான படங்கள் இணைப்பு......
Reviewed by Author
on
August 02, 2016
Rating:

No comments:
Post a Comment