அண்மைய செய்திகள்

recent
-

பல்வேறு குறைபாடுகளின் மத்தியில் நானாட்டான் சந்தைப்பகுதி-நானாட்டான் பிரதேச சபையின் அசமந்த போக்கே காரணம் என மக்கள் விசனம்.- Photos



நானாட்டான் சந்தைப்பகுதியில் கடந்த 8 மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட மீன் விற்பனை நிலையம் இது வரை திறக்கப்படாமல் காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

-குறித்த மீன் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு 8 மாதங்களை கடந்துள்ள போதும் இது வரை திறந்து மீன் வியாபார நடவடிக்கைகள் இடம் பெறாத நிலையில் கட்டாக்காலிகளின் உரைவிடமாக குறித்த மீன் விற்பனை நிலையம் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

-மேலும் நானாட்டான் சந்தைக்கு செல்லும் பிரதான பாதையில் உள்ள மதகு உடைந்த நிலையில் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் குறித்த வீதி காணப்படுகின்றது.

எனினும் நானாட்டான் பிரதேச சபை குறித்த வீதி தொடர்பில் அசமந்த போக்குடன் நடந்து கொள்ளுவதாகவும்,இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் நானாட்டான் சந்தையில் அமைந்துள்ள இறைச்சி கடைக்கு பல இலட்சம் ரூபாய் வருட வரியாக பெறப்பட்ட போதும் நானாட்டான் பிரதேச சபையினால் கவனிக்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே குறித்த பிரச்சினைகள் குறித்து நானாட்டான் பிரதேச சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




பல்வேறு குறைபாடுகளின் மத்தியில் நானாட்டான் சந்தைப்பகுதி-நானாட்டான் பிரதேச சபையின் அசமந்த போக்கே காரணம் என மக்கள் விசனம்.- Photos Reviewed by NEWMANNAR on October 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.