அண்மைய செய்திகள்

recent
-

இலஞ்சம் வாங்கும் பொலிசாருக்கு எதிராக விசேட விசாரணைப்பிரிவு


இலஞ்சம் வாங்கி மாட்டிக் கொள்ளும் பொலிசாருக்கு எதிரான விசாரணைக் கட்டமைப்பில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தப் போவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்படும் பொலிசாருக்கு எதிரான விசாரணைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் இதுவரை காலமும் குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்கள் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டது.

எனினும் பல்வேறு கட்டங்களில் இவ்வாறான விசாரணைகளில் ஒரு தொய்வு மற்றும் தாமதம் காரணமாக வழக்கு பல வருடங்களுக்கு இழுத்தடிக்கப்படும் நிலை காணப்பட்டது.

இதனை நிவர்த்தி செய்து குறித்த வழக்குகளை சீக்கிரமாக முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் , லஞ்சம் வாங்கி மாட்டிக் கொள்ளும் பொலிசாருக்கு எதிரான வழக்குகளை இனி பொலிஸ் தலைமையகத்தின் ஊடாக மட்டுமே விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் உத்தியோகஸ்தர்கள் இவ்வாறான விசாரணைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலஞ்சம் வாங்கும் பொலிசாருக்கு எதிராக விசேட விசாரணைப்பிரிவு Reviewed by NEWMANNAR on October 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.