தேன் என்று சீனிபாகுவை ஏமாற்றி விற்ற நபர் கைது
மட்டக்களப்பு நகரில் தேன் என்று கூறி சீனிப்பாகு கலந்த பாணத்தினை விற்பனை செய்ய முயன்றவரிடம் இருந்து ஒரு தொகை சீனிப்பாகு போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நகரில் போலியான உணவுப்பொருட்களை விற்பனை செய்வோரை கண்டறியும் வகையில் பொதுச்சுகாதார பிரிவினர் பல்வேறு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை மட்டக்களப்பு புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த சீனிப்பாகு போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நாவற்குடாவை சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்தே இந்த சீனிப்பாகு போத்தல்கள் மீட்கப்பட்டதாகவும் இதன்போது 16 சீனிப்பாகு போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
குறித்த பெண்ணுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
தேன் என்று சீனிபாகுவை ஏமாற்றி விற்ற நபர் கைது
Reviewed by NEWMANNAR
on
October 15, 2016
Rating:

No comments:
Post a Comment