ஜெ.க்கு நோய் தொற்று முற்றிலும் குணமாகிவிட்டது: அப்பல்லோ தலைவர் பேட்டி...
தமிழக முதல்வர் ஜெயலலிதா முழுவதும் குணமடைந்து விட்டதாக அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டியளித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி உடல்நிலை சரியில்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துவம்னையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அப்பல்லோ தலைவர் பிரதாப் சி. ரெட்டி இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பொழுது ஜெயலலிதா உடல்நிலை குறித்த நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ஜெயலலிதாவிற்கு உடல்நிலை விரைவாக தேறி வருகிறது. அவருக்கு நோய் தொற்று முற்றிலும் குணமாகிவிட்டது.
தற்போது ஜெயலலிதா எந்த வித பெரிய உபாதைகளும் இல்லாமல் மனதளவிலும், உடல் அளவிலும் திடமாக உள்ளார்.
மேலும் சாதாரண திட உணவுகளை அவர் சாப்பிட்டு வருகிறார். எனவே இம்மாத இறுதிக்குள் அதாவது இன்னும் 20 நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளார்.
ஜெ.க்கு நோய் தொற்று முற்றிலும் குணமாகிவிட்டது: அப்பல்லோ தலைவர் பேட்டி...
Reviewed by Author
on
November 12, 2016
Rating:

No comments:
Post a Comment