92 பேரின் உயிரை பறித்த விமானம்! விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் அம்பலம்
92 பேரின் உயிரிரை பறிக்க காரணமாக இருந்த ரஷ்ய இராணுவ விமான விபத்திற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
விமானத்தின் இறக்கைகளின் பின் பக்க பகுதியில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கான காரணமாகும்.
விபத்திற்கு உள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டியை சோதனையிட்ட போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
விமானம் விபத்திற்குள்ளாவதற்கு நொடி பொழுதிற்கு முன்னர் விமானத்தின் இறக்கை பகுதியில் பிரச்சினை உள்ளது என விமானி கூச்சலிட்டதே இறுதி வார்த்தையாக பதிவாகியுள்ளது.
விமானத்தை மேல் நோக்கி கொண்டு செல்வதற்கு உதவும் விமானத்தின் இறக்கை பகுதி பாதிக்கப்பட்டமையினால் விமானியினால் விமானத்தை கட்டுப்படுத்த முடியாமையினால் விபத்து ஏற்பட்டுள்ளதென தெரியவந்துள்ளது.
அதற்கமைய இந்த விபத்திற்கு காரணம் தொழில்நுட்ப கோளாறு என உறுதியாகியுள்ளதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் ஊடகவியலாளர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் இசைக்கலைஞர்கள், விமானப் பணியாளர்கள் என 92 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
92 பேரின் உயிரை பறித்த விமானம்! விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் அம்பலம்
Reviewed by Author
on
December 29, 2016
Rating:

No comments:
Post a Comment