தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகளுக்கு மன்னார் பிரஜைகள் குழு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு-(படம்)
தமிழ் அரசியல் கைதிகளின் பாடசாலை செல்கின்ற பிள்ளைகளுக்கு மன்னார் பிரஜைகள் குழு பாடசாலை உபகரணங்களை இன்று வியாழக்கிழமை(29) வழங்கி வைத்துள்ளது.
-வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தனது மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட பாடசாலை உபகரணங்கள் இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகளின் பாடசாலை செல்கின்ற பிள்ளைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-மன்னார் பிரஜைகள் குழுவில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை,மன்னார் பிரஜைகள் குழு உறுப்பினர் அந்தோனி சகாயம்,மன்னார் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் மாட்டீன் டயஸ் ஆகியோர் இணைந்து குறித்த உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
-மன்னார்,வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த 40 அரசியல் கைதிகளின் பாடசாலை செல்கின்ற பிள்ளைகளுக்கு குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-

தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகளுக்கு மன்னார் பிரஜைகள் குழு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு-(படம்)
Reviewed by Author
on
December 29, 2016
Rating:

No comments:
Post a Comment