சீ.வி.விக்னேஸ்வரன் புலிகளின் குரலாகவே செயற்பட்டுவருகிறார்
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகளினதும், புலம்பெயர்ந்த மக்களினதும் குரலாகவே செயற்பட்டுவருகிறார் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் 24-09-2017 நடைபெற்ற சர்வதேச செவிப்புலனற்றோர் தின நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
வடக்கின் முதலமைச்சராக இருக்கின்ற சீ.வி.விக்னேஸ்வரன் இந்த நாட்டின் ஒரு நீதியரசராக இருந்தவர். அவரைப் போன்று நானும் இந்த நாட்டு மனிதனாகவே இருக்கிறேன். ஆனால், இந்த அரசின் சில செயற்பாடுகளை அவர் எதிர்ப்பது மற்றும் நிராகரிப்பதையிட்டு நான் கவலையடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.அதே நேரம்,அவர் இப்படிச் செயற்படுவார் என்று நான் நம்பவில்லை. ஏனெனில், அவரின் இரண்டு பிள்ளைகளும் தென்னிலங்கையை சேர்ந்தவர்களையே திருமணம் முடித்திருக்கின்றனர். இவ்வாறு நிலைமைகள் இருக்கையில் அரசியல் காரணங்களுக்காக அவ்வாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் செயற்படுகிறாரே தவிர அவர் உள்ளார்ந்த ரீதியில் அவ்வாறு செயற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற புலிகள் மற்றும் மக்களது விருப்பத்திற்கமைய அவர்களைத் திருப்தி படுத்துவதற்காக அவர்களின் குரலாக சீ.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு செயற்பட்டு வருகின்றதாகவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் 24-09-2017 நடைபெற்ற சர்வதேச செவிப்புலனற்றோர் தின நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
வடக்கின் முதலமைச்சராக இருக்கின்ற சீ.வி.விக்னேஸ்வரன் இந்த நாட்டின் ஒரு நீதியரசராக இருந்தவர். அவரைப் போன்று நானும் இந்த நாட்டு மனிதனாகவே இருக்கிறேன். ஆனால், இந்த அரசின் சில செயற்பாடுகளை அவர் எதிர்ப்பது மற்றும் நிராகரிப்பதையிட்டு நான் கவலையடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.அதே நேரம்,அவர் இப்படிச் செயற்படுவார் என்று நான் நம்பவில்லை. ஏனெனில், அவரின் இரண்டு பிள்ளைகளும் தென்னிலங்கையை சேர்ந்தவர்களையே திருமணம் முடித்திருக்கின்றனர். இவ்வாறு நிலைமைகள் இருக்கையில் அரசியல் காரணங்களுக்காக அவ்வாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் செயற்படுகிறாரே தவிர அவர் உள்ளார்ந்த ரீதியில் அவ்வாறு செயற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற புலிகள் மற்றும் மக்களது விருப்பத்திற்கமைய அவர்களைத் திருப்தி படுத்துவதற்காக அவர்களின் குரலாக சீ.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு செயற்பட்டு வருகின்றதாகவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.
சீ.வி.விக்னேஸ்வரன் புலிகளின் குரலாகவே செயற்பட்டுவருகிறார்
Reviewed by Author
on
September 26, 2017
Rating:

No comments:
Post a Comment