மன்னார்.கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் மின்தடை
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வடமாகாணத்தின் கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.
இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் இன்று வெள்ளிக்கிழமை(08) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளார்.
இதன்படி,இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் கரிக்கட்டுக் குளத்திலும், இன்று காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் வேளாங்குளம், வேளாங்குளம் விமானப்படை, மடுக்குளம் ஆகிய பிரதேசங்களிலும், இன்று காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மன்னார் மாவட்டத்தின் மடுக்கரைப் பிரதேசத்திலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னார்.கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் மின்தடை
Reviewed by Author
on
September 08, 2017
Rating:

No comments:
Post a Comment