அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட புனர்வாழ்வு பெற்றவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் ஊக்குவிப்பு.(photos)


 மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகளின்  வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில்   சுயதொழில் ஊக்குவிப்பு செயல்திட்டம்  இன்று   (7) வியாழக்கிழமை மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலக ஜெய்கா மண்டபத்தில்   இன்று    வியாழக்கிழமை  காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ் தேசபிரிய அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது   புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயக்கா அவர்களின் வழி காட்டலில் மன்னார் மாவட்ட இணைப்பதிகாரி லேப்டினண்ட் கேணல் ரி.எஸ்.எம்.எப்.டபில்யூ   குணவர்தன அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட 11 பயணாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் மற்றும் அதற்கான உணவு மற்றும் மருந்து பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
 





மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட புனர்வாழ்வு பெற்றவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் ஊக்குவிப்பு.(photos) Reviewed by Author on September 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.