கல்விதான் கிராம,பிரதேச,மாவட்டத்தின் அடையாளத்தினை உறுதி செய்கின்றது - இ.சாள்ஸ் நிர்மலநாதன்
இதனால் மாணவர்கள் கல்வி கற்பதற்கான வளங்கள் அற்ற நிலை ஏற்பட்டு தற்பொழுது நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்னார் அடம்பன். ம.ம. வித்தியாலயத்தில் இன்று காலை சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,மடுவலயத்தில் ஒரு தேசியப் பாடசாலையும் இல்லாத குறை தற்போது வரை உள்ளது. இது தொடர்பாக சென்ற ஆண்டுகளில் கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.
இந்த கல்வி வலயத்தில் ஒரு தேசிய பாடசாலை அமைய வேண்டும். அதுவும் மன்னார் அடம்பன்.ம.ம.வித்தியாலயமே தேசிய பாடசாலையாக வரவேண்டும் என்பது எனது எண்ணம்.
எமது மாவட்ட பாடசாலைகளில் வெளிமாவட்ட மாணவர்கள் க.பொ.த.உயர்தரபரீட்சை காலப் பகுதிகளில் தமது பதிவுகளை இப்பாடசாலைகளில் பதிவு செய்து பரீட்சையில் தோற்றி அதிகூடிய புள்ளிகளை பெற்று வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பல்கலைக்கழகம் செல்கின்றார்கள்.
ஆனால் பல கல்வி வளகுறைபாடுகள், மின்சாரம், போக்குவரத்து மற்றும் பல்வேறு துன்பியல்புகளைஅனுபவித்து பரீட்சை எழுதிய இப்பகுதி மாணவர்கள் இதனால் பல்கலைக்கழகம் செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலைஏற்படுகிறது. இது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு என்னால் சுட்டிக்காட்டப்பட்டு முடிவுகளை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான செயற்பாடுகள் எமது மாவட்டத்திலும் இவ்வலயத்திலும் இனிமேலும் ஏற்படாது பார்த்துக் கொள்வது வலயக்கல்விப் பணிப்பாளர், வலயக் கல்வி திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடைய தலையாய கடமையாகும்.
கல்வி என்பது ஒரு சமூகத்தின் உயரிய சொத்து ஒரு கிராமமோ பிரதேசமோ மாவட்டமோ பலதுறையில் அபிவிருத்தியினை எட்டியிருந்தாலும் கல்வி வளர்ச்சியை எட்டாமல் இருந்தால் அடையாளமற்ற கிராமமாகவே கணிக்கப்படும்.
எனவே கல்வி தான் கிராம, பிரதேச, மாவட்டத்தினை சமூகத்தின்முன் அடையாளப்படுத்தப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்,2017ம் ஆண்டு குறித்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 1,500,000க்கான சுற்றுமதில் அமைப்பதற்கான வேலை திட்டங்கள் முன்னெடுப்பட்டு வருகின்றது.
இதேவேளை, இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் பிரான்சிஸ் சேவியர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மடுவலயக் கல்விப் பணிப்பாளர் மாலினி வெனிற்றன, பிரதி கல்வி பணிப்பாளர் யு.லோகேஸ்வரன, பங்குத்தந்தை அருட்த நியூட்டன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கல்விதான் கிராம,பிரதேச,மாவட்டத்தின் அடையாளத்தினை உறுதி செய்கின்றது - இ.சாள்ஸ் நிர்மலநாதன்
Reviewed by Author
on
May 06, 2018
Rating:

No comments:
Post a Comment