மன்னார் மனிதப் புதைகுழி குறித்து பகிரங்கப்படுத்தப்படவேண்டும்! மஹிந்த அணி -
"மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான மர்மத்தை நாட்டு மக்களுக்கு அரசு விரைவில் பகிரங்கப்படுத்தவேண்டும்'' என்று மஹிந்த அணி எம்.பியான பத்ம உதயசாந்த குணசேகர வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போது இடையீட்டுக் கேள்வியொன்றை எழுப்பிய அவர்,
"மன்னார் மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட இடமானது பாதுகாப்பு இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இது தொடர்பான நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
புலிகள் அமைப்பாலோ அல்லது திட்டமிட்ட அடிப்படையில் கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடமாகவே அது விளங்குகின்றது.
எனவே, இதன் பின்னணி தொடர்பில் நாட்டு மக்களுக்கு விரைவில் அரசு தெளிவுபடுத்தவேண்டும்" என்று வலியுறுத்தினார்.
மன்னார் மனிதப் புதைகுழி குறித்து பகிரங்கப்படுத்தப்படவேண்டும்! மஹிந்த அணி -
Reviewed by Author
on
July 20, 2018
Rating:

No comments:
Post a Comment