அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலியா எடுத்த முடிவு - அகதிகளை சிறைவைக்கும் முகாம்கள்:


அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் மற்றும் சிட்னி நகரங்களில் செயல்பட்டு வந்த இரண்டு உயர் பாதுகாப்பு முகாம்கள் மூடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகளை சிறை வைக்கும் இந்த முகாம்களை மூடுவதன் மூலம் சுமார் 500 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் மிச்சப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மெல்பேர்னில் செயல்பட்டு வந்த தடுப்பு முகாம் இந்த வாரம் மூடப்பட்ட நிலையில், சிட்னியில் உள்ள தடுப்பு முகாம் விரைவில் மூடப்பட உள்ளது. இதன் மூலம், அவுஸ்திரேலியாவில் செயல்பட்டு வந்த 9 தடுப்பு முகாம்களில் 2 முகாம்கள் மூடப்படுவது உறுதியாகியுள்ளது.

படகு வழியாக வர முயற்சித்த தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுத்து நிறுத்தியதில் கிடைத்த வெற்றியின் காரணமாக இந்த முகாம்கள் மூடப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோல்மேன் கூறியுள்ளார்.

அதே சமயம், முகாம்களை மூடும் அரசின் நடவடிக்கையை திசைத்திருப்பும் செயல் என தொழிலாளர் கட்சி விமர்சித்திருக்கின்றது.
இந்த முகாம் இரண்டு ஆண்டுக்குள் மூடப்படும் என கடந்த மே 2016 ஆம் ஆண்டு முன்னாள் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா எடுத்த முடிவு - அகதிகளை சிறைவைக்கும் முகாம்கள்: Reviewed by Author on January 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.