அண்மைய செய்திகள்

recent
-

நில்வளா கங்கை பெருக்கெடுக்கும் அபாயம்

நில்வளா கங்கையின் நீர் மட்டம் பானதுகம மற்றும் பிடபெத்தர பகுதியில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக கங்கையின் தாழ் நிலப்பகுதியில் வசிக்கும் மக்கள் குறித்த பிரதேசத்தில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிங் கங்கையில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் நெழுவ, தவலம மற்றும் கொட்டபொல ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அவதானம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த பிரதேசங்களில் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

கிங் கங்கையின் நீரேந்து பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதால் தற்போது கங்கையின் பல பகுதிகள் பெருக்கெடுக்கும் நிலையை அண்மித்து உள்ளது.
நில்வளா கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் Reviewed by NEWMANNAR on May 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.