முன்னாள் கிராம சபை உறுப்பினர் கொரோனா நிதியத்திற்கு ரூ.5000 நிதியுதவியுடன் பிரதமர் மஹிந்தவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.....
அந்தப் பணத்துடன் கடிதம் ஒன்றை அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ளார்.
86 வயதான எஸ்.பி. ஹேவாஹெட்ட அம்பியூலன்ஸ் வண்டியில் இருந்தவாறு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண முறைமை குறித்து தாம் ஆச்சரியமடைந்து, 5000 ரூபா நிதியை அந்த நிதியத்தில் வைப்பிட்டு தம்மையும் அந்த கைங்கரியத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கடிதத்தில் அவர் கோரியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஹேவாஹெட்ட வழங்கிய நிதியை அவரது கரங்களால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கத் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் முன்னெடுக்கவுள்ளார்.
Reviewed by Author
on
June 12, 2020
Rating:





No comments:
Post a Comment