அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக முக நூலில் பதிவிட்ட நபர்

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுரூத்தல்களுக்கு மத்தியிலும் இன்றைய தினம் (11) ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர். குறித்த பரிட்சைக்கு தோற்றிய மாணவர்களின் நலன் கருதி மாவட்ட மட்டத்தில் பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கி இருந்தனர்.

  இந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்டதில் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் தமது பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்கள் பரிட்சை எழுத சென்றிருந்தனர். -மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளமையினை காணக்கூடியாதாக இருந்தது. -மன்னார் மாவட்டத்தில் கொரோனா அச்ச நிலை ஏற்பட்டதன் காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகளை பரீட்சை நிலைய நுழைவாயில் வரை அரதை;துச் சென்று விட்டுள்ளனர். 

 இந்தநிலையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களும் குறித்த நேரத்தில் மண்டபத்தை நோக்கி சென்றுள்ளனர். ஆனால் எங்கும் இல்லாத வகையில் பெற்றோர் கூடி இருந்தனர். எனினும் மாணவர்கள் சுகாதார நடைமுறைக்கு அமைவாக பரிட்சை நிலையத்திற்குள் சென்றனர்.

 இதன் போது பொலிஸார், பரிட்சை திணைக்கள அதிகாரிகள்,பாடசாலை நிர்வாகம் ஆகியோர் கடமையில் இருந்ததோடு, பிராந்திய ஊடகவியலாளர் களும் தமது கடமைகளை செய்தனர். எனினும் கடமையில் ஈடுபட்ட ஊடகவியலாளர் 'சமூக இடைவெளியை பேனாது கதைப்பது எப்படி' என்று 'ஸ்ரேர்லிங் றோகஸ்' என்ற நபர் தமது முக நூல் பக்கத்தில் பதிவை மேற்கொண்டுள்ளார். -குறித்த பதிவிற்கு எதிராகவும், குறித்த முகநூலின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மன்னாரில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக முக நூலில் பதிவிட்ட நபர் Reviewed by Author on October 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.