அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உள்ளடங்கும் அடம்பன் வாமதேவப்புரத்தில் “ பேருந்து தரிப்பிடம்” திறந்து வைக்கப்பட்டது...

இன்று (2020-10-30) காலை 10.00 மணிக்கு சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக பேருந்து தரிப்பிடமின்றி வெயில், மழைக்கு முகம் கொடுத்த அடம்பன் வாமதேவப்புர மக்களின் பாவனைக்காக மாளிகைத்திடலைச்சேர்ந்த அமர்ர்களான வல்லிபுரம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் முத்துப்பிள்ளையின் ஆகியோரின் நினைவாக அவர்தம் பிள்ளைகளின் நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட பேருந்து தரிப்பிடத்தினை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மதிப்பார்ந்த திரு. செ. கேதீஸ்வரன் அவர்களினால் வைபவ ரீதியாக மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

 நிகழ்வில் சமய அனுஸ்டானங்களை துர்கையம்மன் பிரதம குருக்கள்ஐயா அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார் நிகழ்வினை சிறப்பிக்கும்முகமாக திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச்சபையின் இணைச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு. எஸ்.எஸ்.இராமகிருஷ்ணண் , திரு. சு. பிருந்தாவனநாதன் மற்றும் திரு. ம. சூரியபுத்திரன் உள்பட கிராம்மட்ட தலைவர்கள் ஊர் பொதுமக்கள் என பலர்பலந்து சிறப்பித்ததுடன் ஊர் மக்கள் சார்பாக மதிப்பார்ந்த பிரதேச செயலாளர், இராமகிருஸ்ணண். பிருந்தாவனநாதன் ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள்.






மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உள்ளடங்கும் அடம்பன் வாமதேவப்புரத்தில் “ பேருந்து தரிப்பிடம்” திறந்து வைக்கப்பட்டது... Reviewed by Author on October 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.