அண்மைய செய்திகள்

recent
-

பிரான்ஸில் மீண்டும் துயரம்; இரண்டு கிழமைக்குள் மூன்றாவது நபர் உயிரிழப்பு, தூக்கத்தில் உயிர் பிரிந்தாக தகவல்!

யாழ்ப்பாணம் காரைநகர் பாலகாட்டினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்று (09.11.2020) பிரான்ஸில்; திடீரென உயிரிழந்துள்ளார். ஏரம்புநாதன் அரவிந்தன் (வயது-33) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். பிரான்ஸ், பாரிஸில் சக நண்பர்களுடன் அறை ஒன்றில் குடியிருந்த குறித்த இளைஞன் நித்திரையில் இருந்தபோதே உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பாலிஸ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவருடன் தங்கியிருந்த இளைஞர்களையும் விசாரணை செய்து வருகின்றனர். குறித்த இளைஞன் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதுடன், உயிரிழப்புக்கான உத்தியோகபூர்வ காரணம் இதுவரை வெளியாகவில்லை. இதேவேளை பிரான்ஸில் இரண்டு கிழமைக்குள் மூன்று ஈழத் தமிழர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் மீண்டும் துயரம்; இரண்டு கிழமைக்குள் மூன்றாவது நபர் உயிரிழப்பு, தூக்கத்தில் உயிர் பிரிந்தாக தகவல்! Reviewed by Author on November 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.