அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு- கல்முனை வீதியில் பாரிய விபத்து ! ஸ்தலத்திலேயே இளைஞர் ஒருவர் பலி

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்களிலும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிச்சென்ற காரும் மட்டக்களப்பு நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் செங்கலடி பகுதியை சேர்ந்த தர்சன் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிந்துள்ளார். இது தொடர்பில் காரி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



மட்டக்களப்பு- கல்முனை வீதியில் பாரிய விபத்து ! ஸ்தலத்திலேயே இளைஞர் ஒருவர் பலி Reviewed by Author on December 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.