அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சன்னார் பகுதியில் வெலிமருதங்குளம் புனரமைப்பு காதர் மஸ்த்தான் அவர்களால் ஆரம்பித்து வைப்பு

ஜனாதிபதியின் சௌபாக்கிய கொள்கையின் கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் சுமார் 138 குளங்கள் அணைக்கட்டுகள் மறுசீரமைப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு அணைக்கட்டு வைபவ ரீதியாக புனரமைப்பு செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு நிகழ்வு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத் தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

 குறித்த நிகழ்வில் திருமதி அ. ஸ்ரான்லி டி மெல் நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம், பிரதேச செயலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், கமநல சேவை திணைக்கள மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள உயர் அதிகாரிகள், திட்டமிடல் பணிப்பாளர், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். குறித்த மருதமடு அனைக்கட்டானது 1957 ஆண்டு அமைக்கப்பட்டது 600 ஏக்கருக்கு நீர் வழங்கப்பட்ட அனைக்கட்டகும் 1990 ஆண்டுக்கு பின்னர் யுத்த சூழ்நிலை காரணமாக கைவிடப்பட்டு தற்போது முழுமையாக பாதிப்படைந்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது






மன்னார் சன்னார் பகுதியில் வெலிமருதங்குளம் புனரமைப்பு காதர் மஸ்த்தான் அவர்களால் ஆரம்பித்து வைப்பு Reviewed by Author on April 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.