அவசர அறிவித்தல் -மன்னார் நானாட்டான் அரிப்பு வீதியினூடாக பிரயாணம் மேற்கொள்ளும் பிரயாணிகளின் கவனத்திற்கு!.
மன்னார் நானாட்டான் அரிப்பு வீதியினூடாக (B403) பிரயாணம் மேற்கொள்ளும் பிரயாணிகளின் கவனத்திற்கு!. குறித்த வீதியினூடாக மழை காலத்தில் பிரயாணங்களை மேற்கொள்ளும் போது அருவி ஆற்றின் மேலாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு பாலத்தில் வாகனங்களின் டயர்களில் வழுக்கும் தன்மை ஏற்படுத்துவதனால் வீதி விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே அவ்விடத்தில் மிகவும் அவதானமாக தங்கள் பிரயாணங்களை மேற்கொள்ளுமாறு மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் , மன்னார்.
அவசர அறிவித்தல் -மன்னார் நானாட்டான் அரிப்பு வீதியினூடாக பிரயாணம் மேற்கொள்ளும் பிரயாணிகளின் கவனத்திற்கு!.
Reviewed by Vijithan
on
October 16, 2025
Rating:

No comments:
Post a Comment