அண்மைய செய்திகள்

recent
-

தேசிய மருந்துகள் அதிகாரசபையின் ஒரு மில்லியன் தரவுக்கோப்புகள் மாயம்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் தரவுத்தளத்திலிருந்து ஒரு மில்லியன் தரவுக்கோப்புகள் காணாமல்போனமை குறித்து சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தரவுத்தளத்திலிருந்து தரவுக்கோப்புகள் காணாமல்போனமை குறித்த விசாரணைகளை தாங்களும் ஆரம்பித்துள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சதிவேலை இடம்பெற்றதா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தேசியமருந்துகள் அதிகாரசபை ஒன்லைன் மூலம் சேகரித்த தரவுகள் காணாமல்போயுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிஐடிக்கு அறிவித்துள்ளோம் அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என அதிகார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய மருந்துகள் அதிகாரசபையின் ஒரு மில்லியன் தரவுக்கோப்புகள் மாயம் Reviewed by Author on August 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.