அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்-மக்கள் பொருட்கொள்வனவில் ஆர்வம்

உலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்து பிறப்பின் நாளாக கொண்டாடும் கிறிஸ்மஸ் தினத்தை நாளைய தினம் (25) கொண்டாட உள்ள நிலையில் கிறிஸ்தவ மக்கள் அதிகம் செறிந்து வாழும் மன்னார் மாவட்டத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் விமர்சையாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக பொது மக்கள் பொருட்கள் மற்றும் ஆடைகளை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

 பொருட்களின் விலையேற்றம் உள்ளடங்களாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு கடந்த சில வருடங்களாக முகம் கொடுத்து வந்த நிலையில் மக்கள் கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் பொருள் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரித்து உள்ளதுடன் பாலன் குடில்கள் அமைத்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆலயங்களில் சிறிய அளவிலான கிறிஸ்து பிறப்பு மற்றும் விசேட நள்ளிரவு திருப்பலி களுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களை சுகாதார நடைமுறைகளுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












மன்னாரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்-மக்கள் பொருட்கொள்வனவில் ஆர்வம் Reviewed by Author on December 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.