மன்னாரில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு.
குறித்த நிகழ்வில் 8 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டது டன் ஒரு மாணவனுக்கு 50 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு மாணவனுக்கு 20 ஆயிரம் ரூபாவும் ஏனைய மாணவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் காசோலை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை அரசாங்க அதிபர் வழங்கி கௌரவித்தார்.
அத்துடன் 2021ஆம் ஆண்டு இலங்கையில் முதல் 10 சிறந்த மாவட்டங்கள் என இலங்கை சமூக பாதுகாப்பு சபை தரப்படுத்தல் பட்டியலில் மன்னார் மாவட்டம் உள்வாங்கப்பட்ட மையும் இதில் குறிப்பாக நானாட்டான் பிரதேச செயலகம் தேசிய விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் , முசலி பிரதேசம் 100 வீத அடைவு மட்டத்தை பூர்த்தி செய்துள்ளமையும் பாராட்டி அரச அதிபரினால் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் அரச ஓய்வூதிய திட்டத்தின் ஊடாக சிறப்பாக பணியாற்றிய பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உதவி திட்ட பணிப்பாளர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர்,நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்ட அமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு.
Reviewed by Author
on
March 22, 2022
Rating:
Reviewed by Author
on
March 22, 2022
Rating:

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment