வெளிநாட்டு நிறுவனங்கள் வசமாகும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
அடுத்த நான்கு மாதங்களுக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்ய 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்ற அடிப்படையில் அதற்கான டொலர்களை தேடும் வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன. இதனையடுத்தே எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வெளிநாட்டு நிறுவங்களில் சீனாவின் சினோபெக் குழுமம், பிரிட்டிஷ் ஷெல் நிறுவனம் மற்றும் இந்திய நிறுவனங்களின் 27 முன்மொழிவுகள் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ளன. இதன்படி குறித்த எரிபொருள் நிலையங்களை வழங்குவதற்காக நான்கு முன்மொழிவுகளை சுருக்கப்பட்டிலுக்குள் கொண்டு வர எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, எரிபொருள் நிலையங்களை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள், எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் போக்குவரத்து வசதிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அடுத்த மாதத்திற்கான டீசல், பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் தேவைகளை இறக்குமதி செய்வதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்குமாறு திறைசேரி மற்றும் மத்திய வங்கியிடம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் வசமாகும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
Reviewed by Author
on
August 28, 2022
Rating:
.webp)
No comments:
Post a Comment