அண்மைய செய்திகள்

recent
-

கடந்த இரண்டு மாதங்களில் மின் நுகர்வு 20%க்கும் அதிகமாக குறைந்துள்ளது!

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின் பாவனை 20% க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின் நுகர்வு அதிகமாக இருந்த அதே காலகட்டத்தில் மின் நுகர்வு குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 நாளாந்த மின் நுகர்வு விகிதம் குறைந்தது 48 மெகாவாட் என்றும், உச்ச நேரத்திற்கு 2,800 மெகாவாட் மின்சாரம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களில், மின் நுகர்வு 38 முதல் 40 மெகாவாட் மணி வரை இருந்தது. “உச்ச நேரத்தில் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு 2,100 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது. இது 20% குறைப்பை பிரதிபலிக்கிறது. கடந்த வாரத்தில் இருந்து மின்கட்டணமும் அதிகரித்துள்ளதால் நுகர்வோர் என்ற வகையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் போது மின்சாரத்தை சேமிப்பதை மனதில் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கடந்த இரண்டு மாதங்களில் மின் நுகர்வு 20%க்கும் அதிகமாக குறைந்துள்ளது! Reviewed by Author on August 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.