4 வயது மகளை கொடூரமாக தாக்கிய 18 வயது தாய்; 23 வயது கணவன் தலைமறைவு
கம்பஹாவில் 4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய கர்ப்பிணித் தாய் ஒருவர் ஜா - எல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கம்பஹாவில் உள்ள ஜா - எல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஜா - எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான கர்ப்பிணித் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கணவன் தலைமறைவு
ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய கர்ப்பிணித் தாயொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த மகள் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான கர்ப்பிணித் தாய், தனது கணவருடன் இணைந்து நீண்ட நாட்களாக தனது 4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்தி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய கணவன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா - எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment