முல்லைத்தீவு நீதிபதிக்கு இளைக்கப்பட்ட அநீதிக்கு நியாம் கோரி கொழும்பு உயர் நீதி மன்றம் முன் சட்டத்தரணிகள் போராட்டம்
முல்லைத்தீவு நீதிபதி T. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரியும் கொழும்பு உயர்நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகளால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
நீதித்துறைமீது கை வைக்காதே என்று கோரி இன்று திங்கள் கிழமை (09.10.2023) காலை 9.30 மணிக்கு கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் குறித்த போராட்டம் சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டது
முல்லைத்தீவு நீதிபதி T. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரி நீதித்துறைமீது கை வைக்காதே என்ற தொனிப்பொருளில் இந்த மாபெரும் கண்டனப் போராட்டம் இடம்பெற்றது
குறித்த போராட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பெருமளவிலான சட்டத்தரணிகளும் இலங்கையின் ஏனைய மாகாணங்களை சேர்ந்த சட்டத்தரணிகளும் ஜனாதிபதி சட்டத்தரணிகளும் இணைந்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்னர்
முல்லைத்தீவு நீதிபதிக்கு இளைக்கப்பட்ட அநீதிக்கு நியாம் கோரி கொழும்பு உயர் நீதி மன்றம் முன் சட்டத்தரணிகள் போராட்டம்
Reviewed by Author
on
October 09, 2023
Rating:

No comments:
Post a Comment