அண்மைய செய்திகள்

recent
-

சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணத்தில் 45 குடும்பங்கள் பாதிப்பு

 யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.


இதன்படி, கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 02 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன் வேலணை பிரதேச செயலர் பிரிவில் 05 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 06 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த இருவரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 48 அனர்த்தங்களால் பாதிப்படைந்துள்ளனர்.


இதேவேளை, நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 02 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணத்தில் 45 குடும்பங்கள் பாதிப்பு Reviewed by Vijithan on June 23, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.