அண்மைய செய்திகள்

recent
-

பகிடிவதை வழக்கில் கைதான நால்வருக்கு விளக்கமறியல்

 குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவி உள்ளிட்ட 4 சிரேஷ்ட மாணவர்களும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 


இன்று (4) குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் விவசாய உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப டிப்ளோமா பயிலும் முதலாம் தர மாணவி ஒருவர் சமீபத்தில் கல்லூரிக்கு அருகிலுள்ள வாவியில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். 

அருகிலிருந்த ஒரு குழுவினர் மாணவியை மீட்டு உடனடியாக குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

பின்னர் வைத்தியசாலை பொலிஸார் குறித்த மாணவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்தனர். மேலும் கல்லூரியின் பல சிரேஷ்ட மாணவர்கள் அவளைத் துன்புறுத்திய சம்பவத்தின் காரணமாக அவள் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.



பகிடிவதை வழக்கில் கைதான நால்வருக்கு விளக்கமறியல் Reviewed by Vijithan on June 04, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.