மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்ற மாணவர் கௌரவிப்பு விழா-, படங்கள் இணைப்பு
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்த 2012 ம் ஆண்டிற்கான வட.மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி தேசிய மட்ட போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவக்கும் நிகழ்வு (09.07.2012) காலை 9.00 மணியளவில் பாடசாலை பிரதி அதிபர் திரு.P.எமிலியானுஸ்பிள்ளை அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் விருந்தினராக மன்னார் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.P.யூலியஸ் கிளிற்றஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். முதலில் மாணவர்களுக்கு ஆசிவேண்டியும் இறைவனுக்கு நன்றி செலுத்துமுகமாகவும் உயிலங்குளம் பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் மெரிடிகோல் அவர்களால் பாடசாலை பிரதான மண்டபத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக வழிபாட்டிடத்தில் நன்றித்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
வழிபாடுகளின் பின்னர் பாடசாலை அதிபர் திரு.யு.ஞ.து.பெர்ணான்டோ அவர்கள் தமதுரையில் மாணவர்கள் கல்விக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை இணைப் பாடவிதான செயற்பாடுகளுக்கும் கொடுக்க வேண்டுமெனவும் இது மாணவர்களது வேலைவாய்ப்புக்களுக்கும் உயர் கல்விக்கும் சிறப்பான சந்தர்ப்பங்களை வழங்கும் எனவும் சுட்டிக்காட்டி தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட இம் மாணவர்களைப் போல் ஏனைய மாணவர்களும் வரும் காலங்களில் பிரகாசிக்க வேண்டுமெனவும் இவ் வெற்றிகளுக்கு பெருமளவில் பங்காற்றிய பாடசாலையின் பிரத்தியேகப் பயிற்றுவிப்பாளரும் மன்னார் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருமான திரு.P.யூலியஸ் கிளிற்றஸ் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார்.
இறுதியில் பரிசுப்பொருட்கள், வெற்றிக் கிண்ணங்கள் என்பன மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பிரதி அதிபர் திரு.P.எமிலியானுஸ்பிள்ளை அவர்களுடைய நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
இந் நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் விருந்தினராக மன்னார் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.P.யூலியஸ் கிளிற்றஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். முதலில் மாணவர்களுக்கு ஆசிவேண்டியும் இறைவனுக்கு நன்றி செலுத்துமுகமாகவும் உயிலங்குளம் பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் மெரிடிகோல் அவர்களால் பாடசாலை பிரதான மண்டபத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக வழிபாட்டிடத்தில் நன்றித்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
வழிபாடுகளின் பின்னர் பாடசாலை அதிபர் திரு.யு.ஞ.து.பெர்ணான்டோ அவர்கள் தமதுரையில் மாணவர்கள் கல்விக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை இணைப் பாடவிதான செயற்பாடுகளுக்கும் கொடுக்க வேண்டுமெனவும் இது மாணவர்களது வேலைவாய்ப்புக்களுக்கும் உயர் கல்விக்கும் சிறப்பான சந்தர்ப்பங்களை வழங்கும் எனவும் சுட்டிக்காட்டி தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட இம் மாணவர்களைப் போல் ஏனைய மாணவர்களும் வரும் காலங்களில் பிரகாசிக்க வேண்டுமெனவும் இவ் வெற்றிகளுக்கு பெருமளவில் பங்காற்றிய பாடசாலையின் பிரத்தியேகப் பயிற்றுவிப்பாளரும் மன்னார் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருமான திரு.P.யூலியஸ் கிளிற்றஸ் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார்.
இறுதியில் பரிசுப்பொருட்கள், வெற்றிக் கிண்ணங்கள் என்பன மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பிரதி அதிபர் திரு.P.எமிலியானுஸ்பிள்ளை அவர்களுடைய நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
இந் நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்ற மாணவர் கௌரவிப்பு விழா-, படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
July 10, 2012
Rating:
No comments:
Post a Comment