மன்னார் மாவட்டத்தில் வறிய மணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கை கொடுக்கும் சர்வோதையம்.-படங்கள்
மன்னார் மாவட்டத்தில் உள்ள வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக மன்னார் சர்வோதைய அமைப்பு மாணவர்களுக்காண பாடசாலை உபகரணங்களை நேற்று திங்கட்கிழமை வழங்கி வைத்துள்ளது.
மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட 26 பாடசாலைச் சேர்ந்த தரம் -01 இல் கல்வி கற்றும் 250 மாணவர்களுக்கு குறித்த பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பொருட்களின் புத்தகப்பை,பென்சில்,கொப்பி உற்பட பல பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளர்.
குறித்த பொருட்களை மன்னார் மாவட்ட சர்வோதைய அமைப்பின் இணைப்பாளர் எஸ்.யுகேந்திரன்,சர்வோதைய அமைப்பின் சமூக வேலைத்திட்ட இணைப்பாளர் எஸ்.கனேஸ் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்துள்ளனர்.
-மேலும் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட தரம்-01 இல் கல்வி கற்கும் 250 மாணவர்களுக்கு குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட சர்வோதைய அமைப்பின் இணைப்பாளர் எஸ்.யுகேந்திரன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் வறிய மணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கை கொடுக்கும் சர்வோதையம்.-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
February 12, 2013
Rating:
No comments:
Post a Comment