மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா தூதரக செயலாளர் எஸ்.ஸ்ரிபன்
உலக வங்கியின் நிதி உதவியுடன் 'நெல்சிப்' திட்டத்தின் கீழ் மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராய்வதற்காக விசேட குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை(8) மன்னார் நகர சபைக்கு விஜயம் செய்திருந்தனர்.
குறித்த குழுவினருடன், அவுஸ்திரேலியா தூதரகத்தின் முதல் நிலை செயலாளர் எஸ்.ஸ்ரிபன், அவரது உதவியாளர் திருமதி எஸ்.டில்காரா, உலக வங்கியின் திட்ட ஆலோசகர் எஸ்.மனோகரன், ஆகியோரே வருகை தந்தனர்.
இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் நகர சபையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றது.
இதன் போது உலக வங்கியின் நிதி உதவியுடன் 'நெல்சிப்' திட்டத்தினூடாக மன்னார் நகர சபைக்கு வழங்கப்பட்ட 96 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டினூடாக மன்னார் நகர சபை முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்த கலந்துரையாடலில், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், நகர சபையின் செயலாளர் லெனாட் பிரிட்டோ லெம்பேட், உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், நகர சபை உறுப்பினர்கள் உட்பட மன்னார் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.துரம் மற்றும் மன்னார் நகர சபையின் அலுவலகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா தூதரக செயலாளர் எஸ்.ஸ்ரிபன்
Reviewed by NEWMANNAR
on
April 08, 2014
Rating:
No comments:
Post a Comment